
மதுரை மாவட்டம் கேகே நகர் பகுதியில் ஒரு உணவகம் அமைந்துள்ளது. அங்கு கடந்த 31-ம் தேதி சட்டக்கல்லூரி மாணவிகள் சிலர் சிக்கன் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அவர்கள் சிக்கன் பார்சலை வாங்கி விட்டு அவர்களது அறைக்கு சென்றனர். அதன் பின் அவர்கள் அந்த பார்சலை திறந்து பார்க்கும் போது 2 வண்டுகள் இருந்துள்ளன. இதை பார்த்த சட்ட கல்லூரி மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு சென்று தகவலை தெரிவித்தனர்.
ஆனால் அந்த உணவகத்தின் உரிமையாளர் முறையான பதில் அளிக்கவில்லை. இதனால் அந்த மாணவிகள் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தங்களது புகார்களை தெரிவித்தனர். அத்துடன் பார்சலில் கிடந்த வண்டை வீடியோ எடுத்து அதிகாரிகளுக்கு அனுப்பினர். மேலும் அந்த உணவகத்தின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.