சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சமீபத்தில் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 17 வருடங்களுக்குப் பிறகு ஆர்சிபி அணி சிஎஸ்கேவை வீழ்த்தி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு பிறகு சென்னை அணி ரசிகர்கள் தோனியை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் விராட் கோலியை பற்றியும் தற்போது மோசமாக பதிவிட தொடங்கிவிட்டனர்.

இதற்கு தற்போது நடிகை வர்ஷா கண்டனம் தெரிவித்து ஒரு ட்விட்டர் பதிவை போட்டுள்ளார். நடிகை வர்ஷா தமிழில் பிகில், 96 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நிலையில் தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் விராட் கோலி மீதான டிரோல்களுக்கு கண்டனம் தெரிவித்து வர்ஷா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஒரு வீரரை புகழ்வதற்காக இன்னொரு வீரரை நாம் அவமதிக்கக் கூடாது.

நம்முடைய நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் வீரர்களை இப்படி அவமதிப்பது தவறு. அவர்கள் மென் இன் ப்ளூ என்பதை மறந்து விடாதீர்கள். இது ஆர்சிபி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் நடிகை வர்ஷாவின் பதிவுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.