
விழுப்புரம் மாவட்டத்தில் யானை தந்ததற்கான பரிசு பொருட்கள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது திருச்சி மாவட்ட ஆயுதப்படை எஸ்ஐக்கு இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. கடந்த நவம்பர் 25-ஆம் தேதி எஸ்.ஐ மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இந்த நிலையில் மணிகண்டன் நேற்று விழுப்புரம் வனச்சரக அலுவலகத்தில் ஆஜரானார்.
அவரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் மணிகண்டன் யானை தந்ததற்கான பரிசு பொருட்களை விற்பனை செய்தது உறுதியானது. அவரை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். மேலும் மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் யானை தந்தத்தில் செய்யப்பட்ட பொருட்களை அவருக்கு கொடுத்த உறவினரான பாஸ்கரன் என்பவரையும் அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.