சேலம் மாவட்டம் ஆத்தூர் மாவட்ட சிறைச்சாலை நிர்வாக காரணங்களால் ஒரு சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டது. இதனால் அங்கிருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை  பாதுகாப்பதற்காக சுழற்சி முறையில் காவலர்கள் வேலை பார்த்து வந்தனர்.

தினமும் காவலர்கள் வேலை முடிந்து செல்லும் போது பொருட்கள் பட்டியல் குறித்த கணக்கை கொடுக்க வேண்டும். நேற்று முதல் நிலை காவலரான தனபால் என்பவர் பணியில் ஈடுபட்டார். அவர் கணக்கு கொடுக்க வந்த போது நிதானம் இல்லாமல் உளறியதாக தெரிகிறது.

இதனால் சந்தேகத்தின் அடிப்படையில் அவரை பரிசோதனை செய்து பார்த்தபோது தனபால் மது குடித்து இருந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சேலம் மத்திய சிறை கண்காணிப்பாளர் வினோத் பணியின் போது மது போதையில் இருந்த தனபாலை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.