
நடப்பாண்டின் சாம்பியன் பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம். ஆப்கானிஸ்தான் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கும் ஒன்பதாவது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியானது பாகிஸ்தான் மற்றும் துபாயில் வருகிற 19ஆம் தேதி முதல் மார்ச் ஒன்பதாம் தேதி வரை நடக்க இருக்கிறது. பாதுகாப்பு கருதி இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்கான ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. கராச்சியில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.
இந்த நிலையில் சாம்பியன் டிராபியை இந்திய அணியே வெல்லும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார். அதாவது சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வெல்லும். இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு செல்லும்” என்று கூறியுள்ளார்.