
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சபரிமலைக்கு வருடம் தோறும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் நேரில் சென்று இருமுடி கட்டி ஐயப்பனை வழிபட்டு வருகின்றனர். அதிலும் மண்டல மகர விளக்கு சீசனில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும்.
அப்போது கூட்ட நெரிசலில் காரணமாக பக்தர்கள் பலரும் தங்களது செல்போன் மற்றும் உடைமைகளை தவறவிடுவது வாடிக்கையான ஒன்று. அதன் அடிப்படையில் கடந்த வருட மண்டல சீசன் முதல் இதுவரை பக்தர்களின் 230 செல்போன்கள் காணாமல் போனதாக பம்பையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
எனவே தொலைந்து போன செல்போன்களை மீட்பதற்காக போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில் தொலைந்து போன 102 செல்போன்கள் மட்டும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்தனர். அந்த செல்போன்களை கொரியர் மூலம் உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக போலீசார் தெரிவித்தனர்.