
இலங்கையில் கடந்த வருடம் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்தது. எனவே இலங்கையில் உள்ள தமிழர்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதனால் அவர்கள் தனுஷ்கோடிக்கு குடிபெயர்ந்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய கடலோர காவல் படையினர் அவர்களை அகதி முகாமிற்கு அனுப்பி வைத்தனர். பின்பு இலங்கையில் பொருளாதார நெருக்கடி சரியான பிறகு அங்கிருந்து தனுஷ்கோடிக்கு செல்லும் அகதிகள் வருகை முற்றிலும் குறைந்தது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனுஷ்கோடி மணல் திட்டில் 3 மர்ம நபர்கள் சுற்றி திரிவதாக கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 3 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள் பேச்சாளை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் குடும்ப சூழ்நிலை காரணமாக 3 பேரும் இந்தியாவிற்கு வந்ததாக தெரிய வந்தது. இதனையடுத்து 3 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் அவர்கள் மீது ஏதேனும் வழக்கு பதிவு உள்ளதா என விசாரணை நடத்தினர். பின்பு மூவரையும் அகதி முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.