
தமிழ்நாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இன்று பிற்பகல் ஒரு மணி வரையில் தமிழ்நாட்டில் மொத்தம் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தற்போது வானிலை ஆய்வு மையம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அதன்படி நீலகிரி, கன்னியாகுமரி, ராமநாதபுரம், நாகை, தென்காசி, தேனி, திருப்பூர், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.