
ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில் வெங்கடேஸ்வரராவ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்மாவதி (38) என்ற மனைவியும், ஜஸ்வந்த் ஜாய் என்ற மகனும் இருந்துள்ளனர். இவரது சகோதரி ஹேமலதா. இவர்கள் நான்கு பேரும் காரில் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த நிலையில் பின்னர் திருவண்ணாமலைக்கு அருணாச்சலேஸ்வரர் சுவாமியை தரிசனம் செய்ய சென்றனர்.
இந்த காரை வெங்கடேஸ்வரராவ் ஓட்டி சென்ற நிலையில் கோவிலில் இருந்து இவர்கள் கிளம்பி சென்ற போது திருப்பதி அருகே கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் பத்மாவதியும் அவரது மகனும் உயிரிழந்த நிலையில் மற்ற இரண்டு பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.