உத்தரபிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில் காதலை மையமாகக் கொண்டு நடந்த ஒரு சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சௌரிக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது கணவனை விட்டுப் பிரிந்து, மைத்துனருடன் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், அந்த மைத்துனர் திடீரென வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் அந்தப் பெண் நீதிக்காக அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

20 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆன அந்தப் பெண்ணுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். கணவர் வேலைக்காக இடைவிடாமல் வெளியே சென்றபோது, அவருடைய இளைய சகோதரருடன் அந்தப் பெண் நெருக்கமாக பழகத் தொடங்கியுள்ளார். பின்னர், மைத்துனர் அவளிடம் திருமண உறவுக்குள் இருப்பது போல நடந்து, 5 ஆண்டுகளுக்கும் மேல் உடல் உறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த கணவர், மனைவியுடன் உறவை முறித்துக்கொண்டார்.

கணவனை விட்டு பிரிந்ததும், அந்த பெண் தன் மைத்துனருடன் வாழத் தொடங்கினார். அவரும் அவளையும் கணவன் மனைவி போல நடத்தி வந்த நிலையில், திடீரென அவர் வேறு திருமணத்தை திட்டமிட்டார். இதற்காக முத்திரை வைத்த ஆவணத்தில் பெண்ணிடம்  கையொப்பம் வாங்கியதாகவும், தனக்கும் பெண்ணுக்கும் எதுவும் தொடர்பில்லை என அதில்  எழுதியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மே 7ஆம் தேதி அவரது திருமணம் நடைபெற இருப்பதாகவும் அந்தப் பெண் புகார் கூறியுள்ளார்.

தனது வாழ்க்கையில் கணவனையும் மைத்துனரையும் இழந்த நிலையில், “நான் வீட்டிலும் இல்லை, காட்டிலும் இல்லை” என வேதனையுடன் கூறிய அந்தப் பெண், தற்போது எஸ்பியிடம் நேரில் முறையிட்டு நீதிக்காக கோரிக்கை வைத்துள்ளார். மேலும் அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாக அந்த பெண் தற்போது கணவனையும் இழந்து மைத்துனரையும் இழந்து நடுரோட்டில் இருப்பது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.