சமஸ்திபுரில் பயணித்த வைசாலி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைசாலி சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில்  பயணித்த ஒரு மாற்றுத்திறனாளி பயணியை ரயில்வே பாதுகாவலர் ஒருவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மீதான வன்கொடுமைகளை தடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.