நடிகை கீர்த்தி சுரேஷ் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அந்த படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் அவரை பார்த்து ரசித்தது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான். இதனை அடுத்து இவருக்கு பெரிய பெரிய படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தது. விஜய், ரஜினி போன்ற உச்ச நட்சத்திர நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்து தேசிய விருது பெரும் அளவிற்கு உயர்ந்தார். நடிகர் திலகம் படத்தில் நடித்து பிரபல நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்து விட்டார்.

அதன் பிறகு ஹிந்தி, தெலுங்கு என்று கலக்கத் தொடங்கிய கீர்த்தி அண்மையில் கூட நடிகர் நானியோடு இணைந்து தசரா படத்தின் கிராமத்து பெண்ணாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் புகைப்படம் இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகின்றது. அதாவது சில்க் ஸ்மிதாவை நினைவுபடுத்தும் விதமாக புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். தசரா படத்தில் இடம்பெற்ற சில்க் பாரில் நடிகை சில்க் ஸ்மிதா உருவம் வரையப்பட்டு இருக்கும் அந்த செட்டின் கீழ் இருந்து கீர்த்தி சுரேஷ் இந்த புகைப்படத்தை எடுத்து feel it like silk என்று பதிவிட்டுள்ளார்.