சென்னை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் வெங்கடேஸ்வரா டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 13 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் திருநின்றவூர் சேர்ந்த ஜெயசித்ரா என்பவர் நிர்வாகப் பிரிவில் வேலை பார்த்து வந்துள்ளார்.

சமீபத்தில் பிரசாந்த் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்தபோது 30 லட்சம் ரூபாய் பணம் கையாடல் செய்தது தெரியவந்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் ஜெயசித்ரா பிரசாந்தின் வங்கி கணக்கில் இருந்து தனது குடும்பத்தினரின் வங்கி கணக்குகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை பரிமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

மோசடி செய்த பணத்தில் இருசக்கர வாகனம் வாங்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஜெயசித்ராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.