நடிகை திவ்யா ஸ்ரீதர் செவ்வந்தி தொடரில் நடித்து வந்த நிலையில், சமீபத்தில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதனால் சில தினங்கள் செவ்வந்தி தொடரில் திவ்யா ஸ்ரீதர் நடிக்கவில்லை. இதையடுத்து அவர் சீரியலை விட்டு விலகிவிட்டதாக பல வதந்திகள் கிளம்பியதால் ரசிகர்களும் வருத்தமடைந்தனர். இந்த நிலையில் 2 மாதங்களுக்கு பின் தனது கைக்குழந்தை உடன் திவ்யா ஸ்ரீதர் செவ்வந்தி சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்றுள்ளார்.

அதாவது, திவ்யா தன் குழந்தை உடன் காரில் சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து இறங்கக்கூடிய வீடியோவை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து “அம்மா செய்யாத வேலையோ, அவள் விரும்பாத பணியோ, முத்தமிடாத குழந்தையோ இல்லை. வேலைக்கு போகும் அம்மா எல்லாவற்றையும் செய்கிறாள் எனப் பதிவிட்டுள்ளார். அதன்பின் திவ்யா ஸ்ரீதருக்கு பலரும் தங்களது வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Divya Shridhar (@divya_shridhar_1112)