
பணமோசடி வழக்கு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க இயக்குனரகம் நீண்ட விசாரணைக்குப் பிறகு கைது செய்துள்ளது. அவர் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் நெஞ்சுவலியால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக திமுக செல்வாக்கு மிக்க இடங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. கைதுக்கு எதிராக திமுகவினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். கரூர் மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.