
பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் ஏப்ரல் 18 அன்று நடைபெற்ற குவெட்டா கிளாடியேட்டர்ஸ் மற்றும் கராச்சி கிங்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில், ஒரு கேட்ச் தவறிய காட்சியால் பரபரப்பு ஏற்பட்டது. குவெட்டா அணியின் தூதராக உள்ள பிரபல நடிகை மாயா அலி, கேப்டன் சாஉத் ஷகீல் தவறவிட்ட எளிய கேட்ச் காரணமாக தன் கோபத்தை வெளிப்படுத்தியது, ரசிகர்கள் மத்தியில் வைரலானதாகி வருகிறது. போட்டியின் 19-வது ஓவரில், மொஹமட் நபி எதிரி பந்துவீச்சாளர் ஷான் அபோட்டின் பந்தை மிட்ஆஃப் பக்கம் உயரமாக அடித்தார். ஷகீல் நேர்த்தியாக போனபோதும், பந்தை பிடிக்க முடியாமல் விட்டார்.
Maya Ali k sath Moye Moye hogya..👀🥵🤣 pic.twitter.com/52WPcmLD3I
— Adnan Abbasi (@Adnanabbasi022) April 18, 2025
இந்த கேட்ச் தவறியதனால் நபி அடுத்த ஓவரில் இரண்டு சிக்ஸ்கள் அடித்து அணிக்கு வலுவூட்டினார். போட்டியின் முடிவை பாதித்த இந்த தருணத்தில், மாயா அலியின் முகபாவனைகளும் விரக்தியும் கேமராவில் தெளிவாக பதிவு செய்யப்பட்டது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்கள் பலரும் அதனை மீம் மற்றும் கலாட்டா காட்சிகளாக பகிர்ந்து வருகின்றனர். “கேப்டன் என்ற பெயருக்கு இப்படி ஒரு கேட்ச் விட்டாலே சரியா?” என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.