
நடிகை சுவாசிகா தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் சூர்யா நடிப்பில் ரிலீசான ரெட்ரோ திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்துள்ளார். இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
அப்போது நிகழ்ச்சியில் சுவாசிகா கூறியதாவது, லப்பர் பந்து படத்தின் மூலம் எனக்கு அதிக பாசம் கிடைத்தது. சிறந்த துணை நடிகைக்கான விருதை நடிகர் ஜெயராம் கையினால் வாங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது.
எனது கனவுகள் நிறைவேற உதவி செய்யும் எனது கணவருக்கு மிகவும் நன்றி. லப்பர் பந்து படத்தில் நான் கெத்து பொண்டாட்டி. இங்கே நான் பிரேம் பொண்டாட்டி என கூறினார்.
இதனையடுத்து ஒரு ஆண்மகன் கெத்தாக இருக்க என்ன செய்ய வேண்டும் என கேள்வி எழுப்பிய போது, கெத்தான ஆண் என்பவர் அவருடைய மனைவி மகள்களுடைய கனவுகளை நிறைவேற்ற வேண்டும். அப்படி நிறைவேற்றும் ஆண் தான் கெத்தானவர் என சுவாசிகா கூறியுள்ளார்.