டெல்லியில் ஓடும் பேருந்தில் மாணவி நிர்பையா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசு பேருந்துகளில் பெண் பயணிகளின் காவலர் என்ற பணியிடங்களை உருவாக்கி அதற்கு ஊர்க்காவலர் படையினர் மற்றும் தன்னார்வலர்கள் உட்பட 10,000 பேர் பணியமர்த்தப்பட்டனர். இந்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் கடந்த வருடம் அனைவரும் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த பணியிடங்களை மீண்டும் நிரப்ப கடந்த மாதம் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக ஆளுநர் சக்சேனாவை நேரில் சந்தித்து முறையிட ஆம் ஆத்மி அமைச்சர் சவுரப் பரத்வாஜ் தலைமையிலான அணியினர் சென்றனர். ஆனால் காவல்துறையினர் ஆளுநரை சந்திக்க விடாமல் தடுத்தி நிறுத்தியதால் பாஜக எம்எல்ஏ விஜேந்தர் குப்தாவை ‌ தங்களுடன் ஆளுநரை சந்திக்க வருமாறு ஆம் ஆத்மி கட்சியினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர் செல்ல மறுத்ததால் திடீரென மந்திரி சவுரவ் பரத்வாஜ் திடீரென பாஜக எம்எல்ஏவின் காலில் விழுந்து கெஞ்சினார். மேலும் இது குறித்தான வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.