
தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டையில் தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு அந்த கட்சியின் மாநில இளைஞரணி செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரேமலதா கூறியதாவது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9-ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் தேமுதிக மாநில மாநாடு நடைபெறும். தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.