மொரிசியஸ் நாட்டில் மோனிஸ் குமார் (37) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி பூஜா (32) என்ற மனைவி இருக்கிறார். இவர்களுக்கு மொரிசியஷில் வைத்து ஆண் குழந்தை பிறந்தது.

இந்த தம்பதிகளுக்கு குழந்தை பிறந்து 8 நாட்கள் மட்டுமே ஆகும் நிலையில் குழந்தைக்கு இருதய பிரச்சனை இருந்ததால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை வழங்க முடிவு செய்தனர்.

இதன் காரணமாக அவர்கள் தங்கள் குழந்தையை மொரிசியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் அழைத்து வந்தனர். நேற்று அவர்கள் விமானத்தில் வந்த நிலையில் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது திடீரென குழந்தை இறந்துவிட்டது.

சென்னையில் விமானம் தரையிறங்கியதும் குழந்தை உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.