வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சோசியல் மீடியா தளங்களை மக்கள் அதிக அளவு உபயோகப்படுத்துகின்றனர். சிக்னல் ஆப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை ஒரு கும்பல் பரப்புவதாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் ஹைதராபாத்தை சேர்ந்த பட்டதாரியான வங்கா ரகுநாத் ரெட்டி(22) என்பவர் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் ஆபாச படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றியது தெரியவந்தது. அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த செல்போனில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் இருந்தது.

அவர் சிக்னல் ஆப் மற்றும் டெலிகிராம் மூலம் வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளார். மேலும் ஒரு சிலருக்கு தனிப்பட்ட முறையில் ஆபாச வீடியோக்களை அனுப்பியுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் ரகுநாத்தை அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.