உத்திரபிரதேச மாநிலம் மொராதாபாத்தின் தேவப்பூர் கிராமத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. லக்கன் சைனி என்பவர் தனது 2 1/2 வயது மகன் ஆரவ் மீது கோடாரியை வீசியுள்ளார்.

இதனால் கழுத்தில் படுகாயம் ஏற்பட்டு குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது குரங்குகளை விரட்டுவதற்காக கோடாரியை வீசியதாக லக்கன் சைனி கூறியுள்ளார்.

மேலும் போலீசாருக்கு தெரியாமலேயே குழந்தையின் உடலை புதைக்க ஏற்பாடு செய்தனர். இது குறித்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தும் போது குரங்குகள் மீது கோடாரியை வீசியதாகவும், அது தவறுதலாக குழந்தை மீது பட்டு குழந்தை இறந்ததாகவும் கூறியுள்ளார். குழந்தையின் தாயும், தாய் மாமாவும் இது திட்டமிட்ட கொலை என புகார் அளித்துள்ளனர்.

ஏனென்றால் லக்கன் அடிக்கடி தனது மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி தகராறு செய்து வந்துள்ளார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.