
திருமணத்தின் முக்கிய நிகழ்வுகளான நிச்சயதார்த்தம் மாப்பிள்ளை அழைப்பு பெண் அழைப்பு ரிசப்ஷன் என எல்லாவற்றிற்கும் போட்டோ சூட் நடத்துகின்றனர். கேஷவளாக பேசுவது, நண்பர்களுடன் விளையாடுவது என அனைத்தையும் போட்டோஷூட் எடுத்து மகிழ்கின்றனர். இந்த நிலையில் கேரளாவில் ஒரு திருமணத்திற்காக போட்டோஷூட் நடைபெற்றது.
அப்போது மணப்பெண்ணின் உறவினர்கள் ஆற்று நீரில் ஓடி வருவது போல போட்டோ எடுக்க முயற்சி செய்தனர். யாரும் எதிர்பாராத விதமாக நாய் ஒன்று குறுக்கே வந்தது. மேலும் அந்த நாய் அவர்களை விரட்டி சென்றது. இதனால் அங்கிருந்த பெண்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
குறுக்க இந்த கௌசிக் வந்தா🤣 pic.twitter.com/RxnAMpjXXE
— Amutha (@Amutha74247715) November 25, 2024