
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. இதிலும் சில வீடியோக்கள் சுவாரசியமானதாகவும் அதிர்ச்சியானதாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது. அதாவது ஒரு குடும்ப விழா நடந்து கொண்டிருந்தபோது மேடையில் விருந்தினர்கள் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது கயிறால் கட்டப்பட்டிருந்த காளை மாடு ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து மேடையின் மீது பாய்ந்தது.
@gharkekalesh pic.twitter.com/uX36APsbZS
— Arhant Shelby (@Arhantt_pvt) May 13, 2025
இதனால் விருந்தினர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் சிலர் கீழே விழுந்த நிலையில் அவர்களுக்கு காயமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் நிலையில் 24 மணி நேரத்தில் 2.3 லட்சம் பேர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். மேலும் இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதோடு விருந்தோம்பல்களில் இதுபோன்று காளை மாடுகளை அழைத்து வருவது ஆபத்தானது என்று சிலர் பதிவிட்டுள்ளனர்.