ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் அட்டை பயனர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது குடும்ப அட்டையில் பெயர்கள் உள்ள அனைவரும் இந்த மாதத்திற்குள் ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்து பயோமெட்ரிக் கருவியில் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அவ்வாறு பதிவு செய்யாதவர்களின் பெயர் குடும்ப அட்டையில் இருந்து நீக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளியூரில் இருப்பவர்களும் உடனடியாக கைரேகை பதிவு செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.