
ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானி பகுதியில் முனிராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 13 வயதில் வர்ஷினி என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி 7-ம் வகுப்பு படித்து வந்த நிலையில் நேற்று குடும்பத்தோடு இவர்கள் மட்டன் சாப்பிட்டுள்ளனர். தன்னுடைய மனைவி மற்றும் மகளுடன் முனிராஜ் மட்டன் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது திடீரென வர்ஷினியின் தொண்டையில் ஒரு மட்டன் துண்டு சிக்கியது. இதில் சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் உடனடியாக பெற்றோர் அருகில் இருந்த ஒரு அரசு மருத்துவமனைக்கு தங்கள் மகளை கொண்டு சென்றனர்.
அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இதைத்தொடர்ந்து உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்க முடிவு செய்த நிலையில் உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்று போராட்டம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.