குஜராத் மாநிலத்தில் உள்ள ஆரவல்லி மாவட்டத்தில் தன்சுரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் வசித்து வரும் பெற்றோருக்கு 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது மகள் இருக்கிறார். இந்நிலையில் திடீரென சிறுமி காணாமல் போனதாக பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் மேற்கொண்டு விசாரணையில் சிறுமி தன் தாயாரின் செல்போனை பயன்படுத்தியது தெரிய வந்தது. தன் தாயாரின் செல் போன் மூலம் instagram பயன்படுத்தி வந்த சிறுமி ஒரு 16 வயது சிறுவனுடன் பழகி வந்துள்ளார். இவர்கள் இருவரும் செல்போனில் பேசியும் வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றதாக கூறப்படும் நிலையில் அந்த சிறுவன் சிறுமியை தன் வீட்டிற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அந்த 10 வயது சிறுமியும் அவரின் மூத்த சகோதரியும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் மொத்தம் 7 கணக்குகளை உருவாக்கியதும் அதில் 2 கணக்குகள் மட்டும் செயல்பாட்டில் இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார் சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.