
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த ஒரு சம்பவம் தற்போது மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ள நிலையில் இளைய தலைமுறையினரின் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறி உள்ளது. அதாவது பாட்னாவை சேர்ந்த ஒரு டீன் ஏஜ் சிறுமி instagram மூலமாக மாணவர் ஒருவருடன் பழகினார்.
அந்த மாணவனுடன் இன்ஸ்டாகிராமில் சிறுமி சாட்டிங் செய்து பழகிய நிலையில் அந்த மாணவனின் மூலமாக மேலும் 3 மாணவர்கள் சிறுமிக்கு அறிமுகம் ஆகினர்.
இவர்கள் அனைவரும் நட்புடன் பழகிய நிலையில் மாணவர்கள் மூவரும் அந்த சிறுமியை ஒரு ஹோட்டலுக்கு வருமாறு அழைத்துள்ளனர். அந்த சிறுமியும் அவர்களை நம்பி ஹோட்டலுக்கு சென்ற நிலையில் அங்கு சென்ற பிறகு சிறுவர்கள் மூவரும் சேர்ந்து சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் சிறுமி எதிர்ப்பு தெரிவித்த போதிலும் கட்டாயப்படுத்தி மூவரும் சேர்ந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்தனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி வீட்டிற்கு வந்ததும் தன் பெற்றோரிடம் கூறிய நிலையில் அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் படி மாணவர்கள் மூவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் அனைவரும் 8-ம் வகுப்பு படிக்கிறார்கள் என்பது தெரிய வந்தது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.