
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் 6 வருடங்களாக காதலித்து வரும் நிலையில் திருமணம் செய்யாமலே அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளனர். இதனையடுத்து கடந்த 2018 ல் அந்த ஆணுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் முன்னாள் காதலியிடம் பேசுவதை முற்றிலுமாக அவர் தவிர்த்துவிட்டார்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண் அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பான வழக்கு கர்நாடகா உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.
இதில் நீதிபதி வாலிபர் இளம் பெண்ணை காதலித்து வந்தபோது இவர்கள் விருப்பத்துடன் உறவில் ஈடுபட்டதாகவும் தற்போது காதல் இல்லாததால் இருவரும் பிரிந்துள்ளனர் எனவும் கூறினார். எனவே இந்தப் புகாரானது பாலியல் வன்கொடுமை சட்டத்திற்கு கீழ் வராது எனக் கூறியதுடன் இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.