
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் மற்றும் விஷச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆக அதிகரித்துள்ளது. அதேசமயம் 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் கள்ள சாராயம் விற்பனை செய்யப்படுவதாக வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்க வாட்ஸ்அப் எண்களை மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறை அறிவித்துள்ளது.
(வேலூர் – 8838608868, குடியாத்தம் – 9087756223)