
தெலுங்கானா மாநிலத்தின் மேட்சல் என்ற பகுதியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் உள்ள விடுதியில் ஏராளமான மாணவ மாணவிகள் தங்கி படித்து வரும் நிலையில் மாணவிகளின் குளியல் அறையில் ரகசிய கேமரா ஒன்று இருப்பதாக கூறப்பட்டது. மாணவிகளின் கழிவறையில் ரகசிய கேமரா இருப்பதாக வெளிவந்த தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் சம்பவம் குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் உடனடியாக அங்கு சென்றனர். பின்னர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த 3 மாதங்களில் ரகசிய கேமராக்கள் மூலம் 300 ஆபாச வீடியோக்கள் பதிவு செய்யப்பட்டது தெரிய வந்தது.
இதில் கல்லூரி விடுதியில் வேலை பார்ப்பவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கல்லூரி நிர்வாகம் இந்த விவகாரத்தை வெளியே கூறக்கூடாது என்று மிரட்டி வருவதாக மாணவிகள் கூறியுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்பு உடையவர்களுக்கு தக்க தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். மேலும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதால் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.