சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் கயல் சீரியலை பார்க்க மக்கள் ஆர்வமாக இருப்பார்கள். இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி ஹீரோயினாக நடிக்கிறார்.

முதலில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம் சைத்ரா ரெட்டி ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு யாரடி நீ மோகினி சீரியலில் வில்லியாக நடித்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு ராகேஷ் என்பவரை சைத்ரா காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாதது குறித்து பலரும் கேள்வி கேட்பதை சைத்ரா ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, எல்லாருமே குழந்தையை எப்போது என கேட்கிறார்கள்.

நாங்களும் வரும்போது வரட்டும் என காத்துக் கொண்டிருக்கிறோம். எப்படியும் இரண்டு வருடத்திற்குள் ஒரு குட்டி சைத்து வந்து விடுவாங்க. ஆனால் கமிட்மென்ட் என்பதையும் பார்க்க வேண்டும். குழந்தை என்றால் யாருக்குத்தான் பிடிக்காது? எனக்கும் குழந்தை என்றால் ரொம்ப பிடிக்கும் என பதில் அளித்துள்ளார்.