கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காப்புக்காடு என்ற பகுதியை சேர்ந்தவர் ரசல் ராஜ்(55). இவர் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் ரசல் ராஜ் அவரது வீட்டுத் தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ரசல் ராஜின் குடும்பத்தினர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரசல்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கடந்த சில நாட்களாக ரசல் ராஜ் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு நிறைய கடன் தொல்லை இருந்துள்ளது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த ரசல் ராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.