அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தை சேர்ந்தவர் மான்டே கிராண்டே. கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் இவரது வீட்டு கதவை ஒரு பெண் தட்டியுள்ளார். அந்த பெண் தான் கர்ப்பமாக இருக்கிறேன் எனக் கூறி உள்ளே வருவதற்கு அனுமதி கேட்டுள்ளார். இதனால் மூதாட்டி அந்த பெண்ணை தனது வீட்டிற்குள் அனுமதித்தார்.

உடனே அந்த பெண் மூதாட்டியை தாக்கி அவரது கழுத்தை இறுக்கி லாக்கர் சாவியை பறித்துக்கொண்டாள். சிறிது நேரத்தில் அங்கு வந்து ஆணும் சேர்ந்து மூதாட்டியை சரமாரியாக தாக்கியுள்ளார். இருவரும் சேர்ந்து வீட்டில் இருந்த பொருட்களை திருட முயற்சி செய்தனர்.

அப்போது மூதாட்டி உதவி கேட்டு சத்தம் போட்டதுடன், அவர் வளர்த்த நாய் தொடர்ந்து குரைத்ததால் அச்சத்தில் அந்த பெண்ணும் ஆணும் அங்கிருந்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூதாட்டியின் முகத்தில் காயம் ஏற்பட்டு அவர் மூச்சுத் திணறளால் அவதிப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து மூதாட்டியின் மகன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தனது தாய்க்கு ஏற்கனவே நரம்பியல் பிரச்சனை இருக்கிறது. அந்த பெண் தாக்கியதால் உடல் அளவிலும் மனதளவிலும் பாதிக்கப்பட்டதாக மூதாட்டியின் மகன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்ற வருகிறது. அந்த பெண் மூதாட்டியை தாக்கியது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.