திருவண்ணாமலை மாவட்டம் வேட்டவலத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்(24). 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். பின்னர் சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதனால் கர்ப்பமான சிறுமியிடம் இந்த கருவை கலைத்து விடு. உனக்கு 18 வயது உனக்கு ஆன பிறகு திருமணம் செய்து கொள்கிறேன் என கூறி சிறுமியை கள்ளக்குறிச்சி மாவட்டம் தேவபாண்டலம் கிராமத்தில் இருக்கும் மருந்து கடைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு சிவா என்பவரிடம் 90 ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து அந்த மருந்து கடையிலேயே சிறுமிக்கு கருக்கலைப்பு செய்துள்ளார். அதன் பிறகு சிறுமியிடம் பேசுவதை கல்யாண சுந்தரம் நிறுத்திவிட்டார். இதனால் பாதிக்கப்பட்ட சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் போலீசார் கல்யாண சுந்தரத்தை பிடித்து விசாரித்த போது அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனால் கல்யாணசுந்தரம், சிறுமிக்கு கருக்கலைப்பு செய்த சிவா ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

சிவா 12- ஆம் வகுப்பு மட்டுமே படித்துவிட்டு நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது. இதனால் அதிகாரிகள் மருந்து கடையை பூட்டி சீல் வைத்தனர்.