காஞ்சிபுரம் மாவட்டம் பொழிச்சலூர் பிரேம் நகரை சேர்ந்தவர் பிரபாகரன்(7). இவர் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபர்களிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பல லட்ச ரூபாய் மோசடி செய்து தலைமறைவானார்.

சமீபத்தில் நாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிலரிடம் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி திருபாகரன் 10 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு தலைமறைவானார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கிருபாகரனை தேடி வந்தனர். போலீசார் சார்பில் தேடப்படும் குற்றவாளி என கிருபாகரன் புகைப்படத்துடன் நோட்டீஸும் ஒட்டப்பட்டது.

அவர் நாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலமாக இலங்கைக்கு தப்பி செல்ல முயற்சி செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் போலீசார் அதிரடி சோதனையில் இலங்கைக்கு தப்பி செல்ல முயன்ற கிருபாகரனை சுற்றி வளைத்து பிடித்தனர்.