
உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில், ஒரு ஒன்றரை வயது ஆண் குழந்தையின் ஆணுறுப்பை பிளேடால் வெட்டிய கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது படலாபூர் கிராமத்தில், வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை பழைய தகராறு காரணமாக அக்கம்பக்கத்து பெண் ஒருவர் தாக்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒன்றரை வயது ஆண் குழந்தை வெளியே விளையாடிக் கொண்டிருந்த நிலையில் பக்கத்து வீட்டு பெண் சிறுவனின் ஆண்குறியை அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
அந்த குழந்தை வலியால் கதறி துடித்த நிலையில் தற்போது மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்ட நிலையில் இரு குடும்பங்களுக்கு இடையே பழைய தகராறு இருந்ததும் பண்டிகையின் போதும் தெரியவந்தது. மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பெண்ணை தேடி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.