
கர்நாடக மாநிலத்தில் உள்ள குந்தப்பனஹள்ளி கிராமத்தில் அனுஷா என்ற பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக அனுஷா தனது கணவரை விட்டு பிரிந்தார். அதன் பிறகு அனுஷா பவன் என்ற வாலிபரை காதலித்துள்ளார். அவருடன் நெருங்கி பழகியதால் அனுஷா கர்ப்பமானார். இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அனுஷா பவனிடம் கூறியுள்ளார்.
ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. அனுஷா தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். நேற்று முன்தினம் பவன் வீட்டில் அனுஷா சடலமாக கிடந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனுஷாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் பவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.