ஆந்திரா மாநிலம் பாபட்லா மாவட்டத்தில் உள்ள வேடபலம் மண்டலத்தின் ராமண்ணாபேட்டை பகுதியில் ஒரு பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒரு மாதம் கழித்து தற்போது வெளியாகியுள்ளது. சம்பந்தப்பட்ட பெண் பிரமிளா என்ற தீபிகா (வயது 24) கடந்த ஒரு மாதமாக காணாமல் போயிருந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டதில், இது ஒரு திட்டமிட்ட கொலை என கண்டறிந்துள்ளனர்.

தீபிகா தனது கணவர் இறந்த பிறகு மதுவுக்கு அடிமையாகியுள்ளார். இவருக்கு  நிஜாம்பட்டணத்தை சேர்ந்த ஈகா வெங்கடேஸ்வர ராவ் என்பவருடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருந்தது. ஆனால் அந்த நபரின் மைத்துனர் நாகபாபுவுடனும் தீபிகா தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் தீபிகா, நாகபாபுவை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த வெங்கடேஸ்வர ராவும், நாகபாபுவும் சேர்ந்து தீபிகாவை கொலை செய்ய திட்டமிட்டனர். அவர்களை இருவரும் பந்தில்லப்பள்ளி-திமசமுத்திரம் சாலையில் உள்ள ஒரு வெறிச்சோடிய இடத்திற்கு தீபிகாவை அழைத்துச் சென்று, மது அருந்தச் செய்து பீர் பாட்டிலால் தலையில் அடித்து கொலை செய்தனர். பின்னர் கழுத்தை நெரித்து  கொலை செய்து, உடலை அங்கேயே புதைத்துவிட்டனர்.

தீபிகா காணாமல் போனதை உறவினர்கள் புகாரளித்திருந்த நிலையில், போலீசார் விசாரணையில் ஈகா வெங்கடேஸ்வர ராவும் நாகபாபுவும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் விசாரணை நடத்தியபோது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் தீபிகாவின் உடல் மீட்கப்பட்டது. இதற்குப் பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது பற்றி சிராலா டிஎஸ்பி மொயின் கூறியதாவது, “இந்த வழக்கில் இருவரும் திட்டமிட்ட வகையில் கொலை செய்தது உறுதியாகியுள்ளது. பிரமிளா எனும் தீபிகாவின் உடலை அவரது குடும்பத்தினர் அடையாளம் கண்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.