
கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு பகுதியில் சீனிவாஸ் என்ற 30 வயது நபர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே கணவனை பிரிந்து விவாகரத்து பெற்ற ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பெண் காடுகோடி பகுதியில் வேலை பார்த்து வந்த நிலையில் அதே பகுதியில் வேலை பார்த்த சீனிவாசுடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி சீனிவாஸ் அந்த பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்தார்.
அவர்கள் இருவரும் தனிமையில் உல்லாசமாக இருப்பதை சீனிவாஸ் தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்த நிலையில் அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிடுவதாக மிரட்டி அந்த பெண்ணிடம் தொடர்ந்து பணம் பறித்து வந்தார். இதனால் பயந்து போன அந்த பெண்ணும் பல லட்ச ரூபாய் பணம் மற்றும் தங்க நகைகளை அவரிடம் கொடுத்துள்ளார்.
இருப்பினும் வாலிபர் தொடர்ந்து தொல்லை கொடுத்ததால் அந்தப் பெண் பொறுக்க முடியாமல் பின்னர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே அவர்கள் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர். மேலும் அந்த வாலிபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.