மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு உணவு, உடற்பயிற்சி இன்றியமையாத ஒன்று. இதனை தாண்டி மன நிம்மதி, சந்தோஷத்திற்கு காதலிப்பதும் ஆரோக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்த வகையில் கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் என்பது காமத்தை மட்டும் சேர்ந்தது கிடையாது. அது உண்மையான அன்பை வெளிப்படுத்தும் விதத்திலும் அமையலாம். கட்டிப்பிடிக்கும் போது மன இறுக்கத்தை குறைக்கும் என்பது பலருக்கும் தெரிந்திருக்கிறது .கட்டி அணைப்பதால் உடல் மற்றும் மன ஆரோக்கிய மேம்படும் என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.  இதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக கட்டி அணைக்கும் போது நம்முடைய உடலில் ஆண்டிஆக்சிடைசின் எனும் ஹார்மோன் சுரப்பு அதிகமாகின்றது. இதனால் இதய ஆரோக்கியம் மேம்படும். மன அழுத்தம் அல்லது உடல் சோர்வு ஏற்படும் போது மனதிற்கு பிடித்த நபரை கட்டி அணைப்பதால் மன அழுத்தம் குறைந்து புத்துணர்வு ஏற்படுவதாக  ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகிறது. மனதிற்கு பிடித்தவர்களை கட்டியணைக்கும் பொழுது உடலில் சுரக்கும் சுரப்பியினால் மன அழுத்தம் மற்றும் பதற்றம் குறையும் என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் கூட அணைத்தல் முக்கியமான தேவையாக உள்ளது.  தனிமை ஒன்றை போக்க பெரிதும் துணை புரிகிறது. குழந்தைகளை தங்கள் பெற்றோர் கட்டி அணைக்கும் போது அவர்களின் நம்பிக்கை அதிகரிக்கிறது. உண்மையில் கட்டி அணைத்தல் தியானம் செய்வதற்கு சமமான மன அமைதியை கொடுக்கும். இது நம்முடைய மனதில் மகிழ்ச்சியை தூண்டும். அடிக்கடி மனதிற்கு பிடித்தவர்களை கட்டி அணைப்பதால் மனதில் ஏற்படும் தேவையற்ற பய உணர்வுகள் நீங்கி தன்னம்பிக்கை அதிகரிக்கும்.