
பீகார் மாநிலம் பாட்னா சீதாமரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அந்த பகுதியை சேர்ந்த 5 சிறுவர்கள் ஒன்றாக மிட்டாய் வாங்க சென்றுள்ளனர். அப்போது கடைக்காரர் திரும்பி வேறு பொருளை எடுத்துக் கொண்டிருக்கும் போது அந்த சிறுவர்கள் கடையில் இருந்த கடலை மிட்டாயை திருடிவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதனைப் பார்த்த கடைக்காரர் கோபமடைந்து சிறுவர்களை தாக்கியுள்ளார். மேலும் தன்னுடைய மகன் மற்றும் ஊர் மக்களை வரவழைத்து 5 சிறுவர்களின் ஆடைகளையும் கழற்றி நிர்வாணப்படுத்தியள்ளனர். பின்பு சிறுவர்களின் முகத்தில் சுண்ணாம்பு பூசி செருப்பு மாலை அணிவித்து அந்த கிராமம் முழுவதும் நிர்வாணமாக சுற்றிவர வைத்தனர்.
இதனை சிலர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பரப்பினர். அந்த வீடியோ வலைத்தளங்களில் வேகமாக பரவி வந்த நிலையில் இதுகுறித்து அறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து கடைக்காரர், அவரது மகன் உட்பட 3 பேரை கைது செய்தனர்.
மேலும் சிறுவர்களை தாக்கிய மற்ற நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.