
ஒடிசா மாநிலம் கோபால்பூர் கடற்கரைக்கு ஒரு வாலிபர் தனது காதலியுடன் சென்றுள்ளார். அவர்கள் தனியாக இருந்த போது திடீரென வந்த மர்ம நபர்கள் காதலனை கட்டிப்போட்டு அவரது கண்முன்னே 20 வயது காதலியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரியின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் 4 சிறுவர்கள் உட்பட 10 பேரை கைது செய்துள்ளனர். குற்றம் செய்த சிறுவர்களை இளைஞர்கள் போலவே விசாரிக்க அனுமதிக்குமாறு போலீசார் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.