தமிழ்நாட்டில் கஞ்சா விற்பனை பெருகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் புகார் கூறி வருகின்றனர். இளைஞர்கள் பலரும் லஞ்சவிற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், திருப்பூரில் கஞ்சா என்று நினைத்து ₹33,000க்கு இருவர் மாட்டு சானத்தை வாங்கியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது

. மங்கலம் சாலை பகுதியில் வாகன சோதனையின்போது, கஞ்சா பாக்கெட்டுடன் விற்ற இருவர், வாங்கிய இருவரை போலீசார் கைது செய்தனர். சோதனையில், அது வெறும் மாட்டு சானம் என்று தெரியவந்தது.