பாகிஸ்தானில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு வெள்ளை நிற மாடு ஒன்று ஒரு வயதானவரையும் வாலிபரையும் முட்டி  தாக்குகிறது. அவர்கள் இருவரும் சேர்ந்து அந்த மாட்டை தடுக்கும் என்ற போதிலும் அந்த மாடு விடாமல் அவர்களை புரட்டி எடுத்து தரையில் வீழ்த்தியது.

இதில் முதியவர் கீழே தடுமாறி விழுந்த நிலையில் மீண்டும் அந்த மாடு வந்து அந்த வாலிபரையும் முதிவரையும் சுவரோடு வைத்து முட்டி தாக்கியது. அவர்கள் பயந்து ஓடிய நிலையிலும் மாடு முட்டி தாக்கிய நிலையில் பின்னர் அங்கிருந்து ஓடியது. இறுதியில் அந்த முதியவர் எழுந்து தன்னுடைய செருப்பை எடுத்துக்கொண்டு வேறொரு இடத்தில் வைத்தார். மேலும் அதோடு அந்த வீடியோ முடிவடைந்த நிலையில் தற்போது அந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.