
குஜராத் மாநிலம் அகமதாபாத் ஏர்போர்ட்டில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் 10 நிமிடங்களில் வெடித்து சிதறியது. இது ஒரு மெடிக்கல் கல்லூரி விடுதியின் மேல் விழுந்த நிலையில் ஏராளமான மருத்துவ மாணவர்களும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விமானத்தில் 242 பயணிகள் மற்றும் 10 பணியாளர்கள் என மொத்தம் 252 பேர் பயணம் செய்துள்ளனர். அனைவருமே இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த நிலையில் விமான விபத்தில் பிரிட்டனைச் சேர்ந்த விஷ்வாஸ் குமார் ரமேஷ்(40) என்பவர் உயிர் தப்பினார். ரத்த காயங்களுடன் விஷ்வாஸ் பதற்றமாக நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து அகமதாபாத் விமான விபத்து குறித்து தனது X பக்கத்தில் கூறியிருப்பதாவது,
கருப்புப் பெட்டி தேடுவார்கள்
விமானம் விபத்தானால்ஒரு விமானமே
கருப்புப் பெட்டியாய்க்
கருகிக் கிடக்கையில்
எந்தக் கருப்புப் பெட்டியை
இனிமேல் தேடுவது?பறிகொடுத்தோர்
பெருமூச்சுகள்
கரும்புகையாய்…தீப்பிடித்த கனவுகளின்
சாம்பல்களை
அள்ளி இறைக்கிறது
ஆமதாபாத் காற்றுஅவரவர் அன்னைமாரும்… pic.twitter.com/gDbvw3ccqC
— வைரமுத்து (@Vairamuthu) June 12, 2025