சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகரில் நேற்று ஐபிஎல் மெகா ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் சிஎஸ்கே தக்க வைத்த வீரர்கள் பற்றி பார்க்கலாம். கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைத்த வீரர்கள் குறித்து அறிவிப்புகளை வெளியிட்டது. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எம்.எஸ் தோனியை 4 கோடி ரூபாய்க்கு UNCAPPED PLAYER விதிமுறையில் தக்க வைத்துள்ளது. இதேபோன்று சென்னை அணியில் ஜடேஜாவை 18 கோடி ரூபாய்க்கு ஜடேஜாவையும், 12 கோடி ரூபாய்க்கு சிவம் துபே, 18 கோடி ரூபாய்க்கு ருதுராஜ் கெய்க்வாட்டையும், மதிஷா பத்திரனாவை 13 கோடி ரூபாய்க்கும் சிஎஸ்கே தக்க வைத்துள்ளது.

மேலும் இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆப்கானிஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் நூர் அகமதுவை 10 கோடி ரூபாய்க்கும், அஸ்வினை 9.75 கோடி ரூபாய்க்கும், டேவோன் கான்வேவை 6.25 கோடி ரூபாய்க்கும், கலீல் அகமதுவை 4.80 கோடி ரூபாய்க்கும், நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரவை 4 கோடி ரூபாய்க்கும், ராகுல் திரிபாதியை 3.40 கோடி ரூபாய்க்கும், விஜய் சங்கரை 1.20 கோடி ரூபாய்க்கும் சிஎஸ்கே வாங்கியுள்ளது. மேலும் இன்றும் ஐபிஎல் மெகா ஏலம் தொடர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.