ஐசிசி டி20 உலக கோப்பை போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அணி தொடர்பாக முன்னணி வீரர்கள் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா இந்திய அணியில் இடம் பெற்றுள்ள வீரர்கள் குறித்த தன்னுடைய கருத்தினை தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக ஷிவம் துபே இருப்பார்.

பெரிய சிக்சர்களை அடிக்கும் போது திடமாக நிற்கும் திறமை மிகவும் அரிதான தாகும். அந்த வகையில் ஷிவம் துபே இந்திய அணியின் துருப்புச் சீட்டாக விளையாடி வெற்றி உதவுவார். விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து ரோகித் சர்மா முடிவெடுப்பார். அதே நேரத்தில் ஜெய்ஸ்வால் மிகவும் வித்தியாசமான முறையில் பேட்டிங் செய்கிறார். மேலும் சூழ்நிலை வந்தால் ஷிவம் துபே கண்டிப்பாக இந்தியாவுக்காக பந்து வீசவும் தயாராக இருப்பார் என்று கூறியுள்ளார்.