உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் ஒரு ஐஐடி நிறுவனம் உள்ளது. இங்கு காவல் உதவி ஆணையாளர் முகமது மொஹ்சின் கான் ‌ஒருவர் phd படித்து வந்துள்ளார். இவர் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பாக இணையம் தொடர்பான பிஎச்டி படிப்பில் சேர்ந்தார். இதே கல்லூரியில் 26 வயது மாணவி ஒருவரும் பிஎச்டி படித்து வந்தார். இந்த மாணவியுடன் கல்லூரியில்  சேரும்போதே அவர் தொடர்பு ஏற்படுத்திக் கொண்ட நிலையில் பின்னர் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்து விட்டு  மாணவியை திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். பின்னர் அந்த மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது தொடர்பாக கடந்த 24ஆம் தேதி அந்த மாணவி புகார் கொடுத்த நிலையில் அவர் மீது துறை‌ ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது அவருடைய படிப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். அதன்படி ஐஐடி கல்லூரியில் அவர் படித்து வந்த பிஎச்டி படிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதை அந்த கல்லூரி நிர்வாகம் உறுதி செய்துள்ளது. மேலும் மாணவி புகார் கொடுத்துள்ளதால் அந்த காவல் உதவி ஆணையாளர் மாணவியை சமூக வலைதள மூலம் அச்சுறுத்தல் கொடுப்பதாக மிரட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்