சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அதிர்ச்சி தரும் வீடியோ தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஓடும் ரயிலின் மீது ஒரு பெண் ஓடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்துடனும், ஆவேசத்துடனும் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

வீடியோவில், அந்த பெண் ரயிலின் மேல் அசால்ட்டாக நின்று வேடிக்கை பார்க்கிறார். இது போல உயிரைப் பணயம் வைத்து செய்யப்படும் ஸ்டண்ட்கள், சமூக பாதுகாப்பு குறித்து பல கேள்விகளை எழுப்புகின்றன.

 

View this post on Instagram

 

A post shared by Flirting Liness | Mahatab 777 (@_flirting.liness)

இந்த வீடியோ @flirting.liness என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை லட்சக்கணக்கான பார்வைகள், ஆயிரக்கணக்கான லைக்குகள், மற்றும் பலரது சோகமும் கோபமும் கலந்த விமர்சனங்களையும் பெற்றுள்ளது. பல பயனர்கள், “இது உண்மையா, இல்லையா?” என்ற சந்தேகத்துடன் இப்படியான செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோருகின்றனர்.

ஒருவரது விமர்சனத்தில், “லைக்குகளுக்காக இப்படி உயிரைக் கொடுக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இன்னொருவர், “இந்த பெண் நிச்சயமாக ஒரு முட்டாள்!” என்று நேரடியாக விமர்சித்துள்ளார்.